படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த 29ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு தமிழ் திரையுலகமும் அஞ்சலி செலுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய்சேதுபதி புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பெங்களூருவில் நடந்து வரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர் புனித் ராஜ்குமார் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நானும் அவரும் (புனித்) போனில்தான் பேசி இருக்கிறோம். என்னுடைய படங்களை பார்த்து விட்டு பாராட்டி இருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட நேரில் சந்திக்கவில்லை. அது இப்போது வருத்தமாக இருக்கிறது. அவரது படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவரோடு பழகாமல் போய்விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. பார்க்காத எனக்கே இவ்வளவு வருத்தமாக இருக்கும்போது அவரது குடும்பத்திரை நினைத்து பார்க்கவே முடியவில்லை. என்றார்.