இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலா இயக்கிய அவன் இவன் படத்திற்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடித்துள்ள படம் எனிமி. அவர்களுடன் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது.
ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரமோசன் செய்யும் விதமாக எனிமி படம் ஓடும் சில தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்கள் முன்பு தோன்றி வருகிறார் விஷால். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் எனிமி படம் பார்க்க வந்த ரசிகர்கள் முன்னிலையில் தோன்றினார் விஷால். அப்போது எனக்கு பிடித்த ஹீரோ விஜய் என்று தெரிவித்தவர், நான் விஜய் படங்களைப் பார்த்துதான் இதுதான் சினிமா என்பதை கற்றுக்கொண்டேன் என்று பேசினார். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.