ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு பகுதியில் ஆபேரஷன் செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்த இவர் இப்போது மெல்ல நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வாங்கி உள்ள புதிய வீட்டிற்கு அவர் சென்று விட்டார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக கூறி புதிய வீட்டின் கிரஹபிரவேச வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவரது தங்கை ஒசைன் ஆனந்த் பூஜை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.