தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‛‛வாசாமி'' பாடல் மூலம் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் அருண்பாரதி. ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ளார்.
இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி கூறியதாவது: வாசாமி பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சிறு தெய்வங்களுக்கு தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவு கூறும் வகையிலும், வேட்டைக்கு செல்லும் குலசாமியின் பெருமை சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.
இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த வாசாமி பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது பிச்சைக்காரன்- 2, காக்கி, கடமையை செய், கார்பன், நா நா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன் என்றார்.