டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது அட்டகத்தி பாணியில் காதலை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கமலிடத்தில் ஒரு ஒன்லைன் கதையை கூறி அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ஒன்லைனை முழு படமாக தயார் செய்யுமாறு கூறியிருக்கிறாராம் கமல்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதைத்தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.