நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி(84) வயது மூப்பு காரணமாக காலமானார். நாகர்கோவில், பார்வதிபுரத்தில் பிறந்தவர் கே.கே.எஸ்.மணி எனும் பாரதி மணி. இளமை காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். ‛‛பாபா, பாரதி, ஆட்டோகிராப், ஐ'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் 'பாரதி' மணி என அழைக்கப்பட்டார்.
'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தனது புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் நேற்று நள்ளிரவு காலமானார்.