சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
டிவியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் வருவதற்கு முன்பே முன்னணி நாயகர்களாக இருந்த சிலரை தனது வெற்றிகள் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார். அதோடு அவர்களது சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
தற்போது நடித்து வரும் 'டான்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். 21வது படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதால் 35 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கப் போகிறாராம்.
விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தமிழ், தெலுங்கு என்ற கான்செப்டில் நுழைய உள்ளார்.