தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக அறிமுகமான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதையடுத்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'கலகலப்பு 2', 'ஹர ஹர மஹாதேவகி' போன்ற படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ராஜவம்சம், இடியட் என 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.
இந்நிலையில் நிக்கி கல்ராணி அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவுக்கு வந்து பற்றி கூறியிருப்பதாவது : உண்மையைச் சொல்லணும்னா, நான் அப்படியே ஒரு ப்ளோவுல சினிமாவுக்குள்ள வந்தேன். அதைப் பண்ணணும், இதைப் பண்ணணும்னு எதையும் அதிகமா யோசிக்கலை. நான் இவ்வளவு பண்ணினதே சந்தோஷமா இருக்கு. ஆனா, இன்னும் நிறைய பண்ணணும்னு ஆசையாவும் இருக்கு. சின்ன வயசுல இருந்து நான் டாக்டராகணும்னு அம்மா என்கிட்ட சொல்லிச் சொல்லி எனக்கும் ஆசை வந்திடுச்சு. ஆனா, பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் பார்த்த பிறகுதான், இது நமக்கு செட்டாகாதுன்னு புரிஞ்சது. அப்புறம், மாடலிங், சினிமான்னு வந்துட்டேன். ஹீரோயினாகணும்னு எப்போவும் நான் நினைத்ததில்லை. அது நடந்திடுச்சு'' என்றார்.