பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

சூர்யாவின் முக்கியமான சில படங்களில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் முக்கிய படங்களாகும். இந்த படங்களில் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக செதுக்கினார் பாலா. ஆனபோதிலும் அதன்பிறகு அவர்கள் இணையாத நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
ஜெயபீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சிவா, ரவிக்குமார் என சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில் தற்போது டிசம்பரில் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்கயிருந்த நிலையில் சூர்யா தயாரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று கதையில் செய்த சில திருத்தங்கள் காரணமாக இப்போது அந்த படத்தில் சூர்யாவே நாயகனாகி விட்டார்.