இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஷ்ரேயா கோஷல். 2015ல் ஷைலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு அம்மாவானார். நேற்று தனது மகன் தேவ்யான் பிறந்து ஆறு மாதங்கள் ஆனதை அடுத்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மகன் சொல்வது போல ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான், எனக்கு இன்றுடன் ஆறு மாதம் ஆகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்கனைக் கேட்பது, பல படங்களுடன் இருக்கும் புத்தகங்களைப் படிப்பது, சுமாரான ஜோக்குகளுக்கெல்லாம் சத்தமாக சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்து என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசீர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷ்ரேயாவிற்கும் அவரது மகனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.