வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இந்த இரண்டு துறைகளின் முக்கிய அதிகார மையங்களாக திகழ்ந்த, இப்போதும் திகழ்கின்ற ஏரியா என்றால் அது சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் இங்கே தான் உள்ளன. சமீபத்தில் கூட நடிகர் தனுஷும் இங்கே இடம் வாங்கி தனி வீடு கட்டு ஒன்றை பிரமாண்டமாக கட்டி வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தற்போது இந்தப்பகுதியில் உள்ள பிரமாண்டமான அபார்ட்மெண்ட் ஒன்றில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நல்ல நாள் பார்த்து இந்த வீட்டில் குடியேற இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின் அமைதியான இந்த ஏரியாவில் தான் வசிக்கவும் விரும்புகிறாராம்.




