ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஒரே ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர்களில் ஒருவர் தமன் குமார். அவர் அறிமுகமான படித்துறை படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அச்சமின்றி, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேதுபூமி, 6 அத்தியாயம், நேத்ரா படங்களில் நடித்தார். எந்த படமும் அவரது கேரியருக்கு உதவவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் சென்றார். இப்போது வானத்தை போல தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். கண்மணி பாப்பா என்ற திகில் பேய் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ரீமணி இயக்கி உள்ளார்.
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தமன் கூறியதாவது: இயக்குனர் ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும். என்றார்.