டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. யானை படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு சமைத்துக் கொடுத்ததை நெகிழ்வுடன் அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நேற்று இரவு படப்பிடிப்பின் போது என் குழுவினருக்கு சமைப்பது மகிழ்வாக இருந்தது... எனக்கு இடம் கொடுத்த அன்பான குடும்பத்திற்கு நன்றி... அவர்கள் தங்கள் அன்பில் மிகவும் பணக்காரர்களாகவும், பெருந்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்... நாம் யார், நாம் என்ன என்பது முக்கியமல்ல. நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் ஒருவருக்கு ஒருவர் பரப்பும் கருணையும் அன்பும் தான்... அன்பைப் பரப்புங்கள்... இந்த அன்பான உள்ளங்கள் அனைத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித் தான் தன் படங்களின் படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பார். அந்த வழியை அருண் விஜய்யும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.