'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி, 8ம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற படத்தை தயாரித்து, இயக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். இதில், ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
பாகுபலி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு 300 கோடி பட்ஜெட்டும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். ஆனால் சரியான இணை தயாரிப்பாளர் கிடைக்காததால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்தி நடிகை திஷா பதானியை தேர்வு செய்தனர்.
என்றாலும் படம் கைவிடப்பட்டது. தற்போது சங்கமித்ரா பட பணிகளை மீண்டும் தொடங்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராபிக்சில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான 300 பாணியில் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.