பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'காவியத் தலைவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜெயில்'. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,'பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், வசனத்தை பாக்கியம் சங்கம் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கொரோனா மற்றும் பைனான்ஸ் சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை வரும் 9ந்தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில் ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று இயக்குனர் வசந்தபாலன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எத்தனை தடைகள் எத்தனை வேலிகள் எத்தனை இடையூறுகள்..... ஜெயில் என்று தலைப்பு வைத்ததாலா என்னவோ படாதபாடுயெல்லாம் பட வேண்டியுள்ளது. கோர்ட் வரை சென்று நல்ல நீதியரசர் தந்த தீர்ப்பால் எல்லா தடைகளும் நீங்கி டிசம்பர் 9 ம் தேதி ஜெயில் திரையரங்குகளில் வெளியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.