தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் பாடகர்களில் ரசிகர்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றவராக சித் ஸ்ரீராம் இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடிய பிறகு அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவரை அந்தப் பாடல் அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தில் ஒரு அற்புதமான அம்மா பாடலைப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில், விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ள 'நான் பார்த்த முதல் முகம் நீ…' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் முறை கேட்கும் போதே பாடல் ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அம்மாவின் பாசம், நேசம் என அனைத்தையும் பாடலில் கொண்டு வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். யுவனின் மென்மையான இசை அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது.
இப்பாடலைப் பற்றி பாடகர் சித் ஸ்ரீராம், “சாதனையாளர் அஜித்தின் 'வலிமை' படத்தில் இந்தப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது. சகோதரர் விக்னேஷ் சிவனின் உறைக்க வைக்கும் வரிகளை, சகோதரர், ஒப்பற்றவர் யுவனின் இசையில் பாடும் அனுபவம் எப்போதும் வியக்க வைக்கும். அனைத்து அம்மாக்களுக்கம் இந்தப் பாடல் காணிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.