இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. இதனால் அவருகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்து விட்டார். இதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரிஸ் மற்றும் சர்வதேச படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் ‛யசோதா' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி - ஹரீஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 6) துவங்கியது.