பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சமீபத்தில் சுரேஷ் கோபி மலையாளத்தில் நடித்த காவல் என்கிற படம் வெளியானது.. இந்தநிலையில் தற்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள சுரேஷ்கோபி, விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள 'தமிழரசன் படம் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 'ஜெயம் ரவியை வைத்து தாஸ் என்கிற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது இந்தப்படத்தில் தனக்கான டப்பிங்கை தானே பேசி வருகிறார் சுரேஷ்கோபி. மேலும் இந்தப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது என்கிற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். அதிரடி போலீஸ் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் நெகடிவ் சாயல் கொண்ட டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறாராம் சுரேஷ்கோபி. கடந்த 2015ல் ஷங்கர் டைரக்சனில் 'ஐ' படத்தில் கூட இதேபோன்ற ஒரு டாக்டர் வேடத்தில் தான் வில்லனாக சுரேஷ்கோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..