மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன்பிறகு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். என்றாலும் பெரிதாக அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் போனார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.
இந்த நிலையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் தமிழ் படமான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:
மம்முட்டி சார் நான் நடித்த ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார். அதில் எனது நடிப்பு பிடித்துவிடவே என்னை அவரது சொந்த படம் ஒன்றில் நடிக்க வைக்க விரும்பினார். அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதனால் அதை மனதில் வைத்து இந்த படத்தில் நான் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். அதன்பிறகு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும், அவரது குழுவினரும் ஜோக்கர் படத்தை பார்த்து விட்டு என்னை தேர்வு செய்தனர்.
முதல் மலையாள படம், குழுவினரும் அறிமுகமில்லாதவர்கள். முதல் இரு நாட்கள் தயக்கத்துடன் இருந்தேன். மம்முட்டி சார்தான் என்னிடம் தமிழில் சரளமாக பேசி எனது தயக்கத்தை போக்கினார். அவர் மிகவும் எளிமையான, இனிமையான, பணிவான மனிதர். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு ரம்யா பாண்டியன் கூறியிருக்கிறார்.