ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர் தனய்யா, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், தலையில் மல்லிகைப் பூ அணிந்து ஒரு மாடர்ன் தமிழ்ப் பெண் போல வந்தார் ஆலியா பட். “எல்லோருக்கும் வணக்கம்' என தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன்பு வந்த '2 ஸ்டேட்ஸ்' படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்தேன். சென்னை வருவது மகிழ்ச்சிதான். “ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தது உற்சாகமான ஒரு விஷயம். அதன்பின் என் மீது நிறைய பேர் அன்பு செலுத்தினார்கள். கனவு நனவாது போல் இருந்தது, டிரைலரைப் பார்த்த போது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

நிகழ்ச்சியில் ஆலியா பட் வந்து கலந்து கொண்டது பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' மலையாள டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வரவில்லை என நினைத்தார்கள். மாறாக 'ஆர்ஆர்ஆர்' தமிழ் பட பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.