இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒரு சில படங்களில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ரிசார்ட் ஒன்றி்ல் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பினார். காரை அவரே ஓட்டி உள்ளார். கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி மரணம் அடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் வெளி உலகிற்கு வர தொடங்கி உள்ளார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று அதனை யாஷிகா பார்வையிட்டார். அங்கு தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண்ணீ்ர்மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த இடத்தில்தான் என் தோழியை இழந்தேன். அதனால் இந்த பகுதியை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த பகுதி மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் நினைவிருக்கிறது. என் தோழியையும் அவர்கள் காப்பாற்றி இருந்தால் இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.