ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிப்பில் உருவான படம் மாநாடு. யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த படம் வெற்றிபெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியினால் கொடுக்க முடியவில்லை. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து அதற்கு டி.ராஜேந்தர் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையினையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்தே மாநாடு திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீதும் டி.ராஜேந்தர் வழக்குத்தொடர்ந்ததை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‛வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா,' எனக் கூறியுள்ளார். அதோடு இது சம்பந்தப்பட்ட விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.