மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளிவந்தது. பிரபல பைனான்சியர், தயாரிப்பாளர், வினியோகஸ்தருமான மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க பூஜை நடத்தி அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதன்பின் அந்தப் படம் பற்றிய அப்டேட்ஸ் அதிகமாக வரவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்படத்தின் தயாரிப்பிலிருந்து அன்புச்செழியன் விலகியதாக செய்திகள் வந்தன. தற்போது அந்தப் படத்தை அவரிடமிருந்து சுமார் 30 கோடிக்கும் அதிகமாக பணம் கொடுத்து தனுஷ் தன் வசப்படுத்தியுள்ளார் என்று சொல்கிறார்கள்.
அன்புச்செழியனுக்கு தனுஷ் தரவேண்டிய கடன் தொகை, இந்த தனுஷ் 55வது படத்திற்கான இதுவரை செய்த செலவுகள் 30 கோடி பிளஸ் என்கிறார்கள். தனுஷுக்கு இந்த வருடம் தமிழில் இயக்கிய படமும், நடித்த படமும் சரியாகப் போகவில்லை. அதனால், இந்த 55வது படத்தை பெரிதும் நம்புகிறாராம். எனவேதான் அதை கைவிட மனமில்லாமல் அவரே பேச்சு வார்த்தை நடத்தி வாங்கிவிட்டதாகத் தகவல்.
விரைவில் அவருடைய சொந்த நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகலாம்.