இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை |
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரேம்.. பிரியாணி, சர்க்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரேம், தான் நடித்த பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லனாக அவதாரம் எடுப்பவராகவும் தான் அதிக அளவில் நடித்துள்ளார். தற்போதும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் பிரேம்.
இந்தநிலையில் முதன்முறையாக வாஸ்கோடகாமா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிரேம்.. நகுல் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஆர்ஜி கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். குணச்சித்திர நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அபூர்வமான விஷயம்.. அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெருமையான ஒன்று என கூறும் பிரேம், அந்த கதாபாத்திரங்கள் குறித்து இப்போது எதுவும் என்னால் சொல்லமுடியாது என கூறியுள்ளார்.