குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஒரு படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் சக்சஸ் மீட் அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபடி மேலேபோய் படம் ரிலீஸ் ஆன அன்றே நடத்திவிடுகிறார்கள், ஹரி ஹர வீரமல்லு, கிங்டம் படத்துக்கு அப்படி நடந்தது. இப்போது உண்மையிலே வெற்றி பெற்று இருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி. 75 கோடிவரை வசூலித்துள்ளது. பின்னே ஏன் சக்சஸ் மீட் நடத்தவில்லை. விஜய்சேதுபதி மீது பாலியல் புகார் வந்ததால், அது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள், மீடியாவில் சர்ச்சை ஆக, இந்த சந்தோஷமான நேரத்தில் இமேஜ் டேமேஜ் ஆகும் என விஜய்சேதுபதி தயங்குகிறாரா என விசாரித்தால், அதுவும் ஒருவகை காரணம்.
ஆனாலும் 100 கோடி வந்தபின் சக்சஸ் மீட் வைக்கலாம் என படக்குழு நினைக்கிறது. ஒருவேளை விஜய்சேதுபதி நேரம் ஒதுக்கினால் இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம். மகாராஜா படத்துக்கு இப்படியொரு சக்சஸ்மீட்டை நடத்தினார் விஜயசேதுபதி. ஆனால், தலைவன் தலைவியில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இருக்கிறது. விஜய் சேதுபதியும் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிஸி. ஆகவே சக்சஸ் மீட் பணிகள் தள்ளிப்போகிறது. எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம்.