ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமூக வலைத்தளங்களில் ஒரு அடிப்படை மரியாதை கூட இல்லாமல் பலர் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை 'டிரோல்' செய்பவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகம்.
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் தரக்குறைவான விமர்சனங்களையும் பலர் முன்வைப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் சமந்தாவை 'டேக்' செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என 'டிரோல்' செய்திருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த சமந்தா, “உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா ரிடுவீட் செய்ததைத் தொடர்ந்து அந்த கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். டுவிட்டர் தளங்களில் இப்படித்தான் போலியான கணக்குகளை ஆரம்பித்து தரமற்ற முறையில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.