'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தடைபட்டு தடைபட்டு ஒருவழியாக முடிந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 24 ஏ.எம். நிறுவனம், தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(டிச., 23) விசாரணைக்கு வந்தபோது, ‛அயலான்' படத்தை ஜன., 3 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன.3க்கு தள்ளி வைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.