‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
ராஜமவுலி இயக்கி உள்ள ஆர் ஆர் ஆர் படம் ஜனவரி 7ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது மறு தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டனர். இதற்கு கொரோனா மூன்றாவது அலை காரணம் என்று செய்திகள் வெளியான போதும் உண்மை காரணம் அது மட்டுமே இல்லையாம்.
தற்போது தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும் ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த நிலை இல்லை. அதனால் திட்டமிட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட படக்குழு தயாரானபோதும், ஆந்திராவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே ஆர்ஆர்ஆர் படம் இந்தியா முழுக்க வெளியான போதும், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த குறைந்த கட்டணத்தில் போட்ட பணத்தை எடுப்பது சிரமம் என்ற விஷயத்தை கருத்தில் கொண்டுதான் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டார்களாம்.
இது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டிலேயே சிரஞ்சீவி, ராஜமவுலி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அங்குள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர், அப்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே இருந்த டிக்கெட் கட்டணத்தையும் தற்போது குறைத்து விட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுப்பது கடினமாகிவிடும் என்று தான் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அங்குள்ள திரையுலகினர் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.