சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட்டில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் கரிஷ்மா கபூர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான ரந்தீர் கபூரின் மகள். அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் நேற்று இரவு லண்டனில் திடீர் மாரடைப்பால் காலமானார். விஷயம் அறிந்ததும் கரிஷ்மாவின் தங்கை கரீனா, இவரது கணவர் சைப் அலிகான், நடிகை மலாய்க்கா அரோரா ஆகியோர் மும்பையில் உள்ள கரிஷ்மாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
கரிஷ்மா, சஞ்சய் இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2016ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். சஞ்சய் கபூர் சிக்ஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார்.
விவாகரத்து பெறுவதற்கு முன்பாக சஞ்சய் மற்றும் அவரது அம்மா தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை கொடுமை என அவர்கள் மீது வழக்கு தொடுத்திருந்தார் கரிஷ்மா.
விவாகரத்து பெற்ற பின் பிரிய சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் சஞ்சய். நேற்று அகமதாபாத் விமான விபத்து பற்றி கூட இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். போலோ விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என செய்தி வெளியாகி உள்ளது.
தன் முன்னாள் கணவர் மறைவு குறித்து கரிஷ்மா சமூக வலைத்தளத்தில் இன்னும் எந்தப் பதிவும் பதிவிடவில்லை கரிஷ்மா.