ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவரது படங்களுக்கும், நடனத்திற்கும் என தனி ரசிகர்கள் கூட்டம் தெலுங்கில் மிக அதிகமாக இருந்தது. அது போல அவருக்கு மலையாளத்திலும் ரசிகர்கள் அதிகம். ஹிந்தியில் அல்லு அர்ஜுன் படங்களை யு டியூப் தளங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.
இருந்தாலும் தமிழிலும், ஹிந்தியிலும் அவரது தெலுங்குப் படங்கள் டப்பிங் ஆகி வெற்றி பெற்றதுமில்லை, வசூலைக் குவித்ததும் இல்லை. சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்த அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த போது பிறந்து வளர்ந்து ஊரில் வெற்றி பெற வேண்டும், அதுதான் முக்கியமான வெற்றி என்று உத்வேகத்துடன் பேசினார். அவர் நினைத்தது போலவே 'புஷ்பா' படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்று நேரடி தமிழ்ப் படங்கள் அளவிற்கு வசூலைக் குவித்தது. கடந்த வருடம் வெளிவந்த படங்களில் படத்தை வாங்கியவர்களுக்கு லாபத்தைக் கொடுத்தது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சி. 25 கோடிக்கும் அதிகமான வசூல தமிழ்நாட்டில் கிடைத்ததாம்.
அது போலவே, ஹிந்தியிலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 75 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம். 100 கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். தமிழ், ஹிந்தியில் இந்தப் படத்திற்காக அதிக அளவில் விளம்பரங்கள் செய்யவில்லை, பிரமோஷன் செய்யவில்லை. ஆனால், வேறு எந்தப் படமும் போட்டிக்கு இல்லாததால் இந்தப் படம் பெரிய வெற்றி பெற காரணமாக அமைந்துவிட்டது. மேலும், படத்தின் பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துவிட்டது.
அல்லு அர்ஜுனுடைய திறமைக்குக் கிடைத்த வெற்றி இது என்றாலும் அவருக்கு நேரமும் சரியாகக் கொடுத்து அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.