இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை மூலம் புகழ்பெற்றவர் பிரஜின். அதன் பிறகு சினிமாவுக்கு சென்றார். தீ குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார்.
என்றாலும் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார். நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். குஹாசினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். ஜிஜு ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது: இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. அரசியல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டு நடப்பு, அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். என்கிறார் இயக்குநர் சீயோன்.