தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
செல்வராகவன் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சாணிக்காயிதம் மற்றும் திரவுபதி இயக்குனர் மோகனின் அடுத்த படம் இரண்டிலும் நாயகனாக நடித்து வருகிறார். விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வில்லனாக நடிக்க இருக்கிறார். ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷுக்கும் முக்கிய கதாபாத்திரமாம்.