இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
காமெடி படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சுந்தர்.சி பாகுபலி போல ஒரு வரலாற்று படத்தை இயக்கவேண்டும் என விரும்பியே 'சங்கமித்ரா'வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக முடிவான இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமானார். அப்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ஸ்ட்லுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன.
ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்தநிலையில் படத்தை தயாரிப்பதாக சொன்ன தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கையும் விளக்கமும் கலந்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் சாராம்சம் இதுதான்.. அதாவது இந்தப்பட தயாரிப்பில் தாங்கள் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என கூறிக்கொண்டு ஒரு சிலர் அதற்கான பணம் திரட்டுகிறோம் என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.. இது சட்டத்திற்கு புறம்பானது.. நாங்கள் அப்படி பணம் திரட்டவோ அல்லது திரட்டுவதற்காக எங்கள் பிரதிநிதிகள் என யாரையுமோ நியமிக்கவில்லை. அதனால் இப்படி கூறிக்கொண்டு வரும் நபர்களிடம் யாரும் இந்தப்படம் சம்பந்தமாக எந்தவித பணப்பரிமாற்றமும் செய்துகொள்ள வேண்டாம். இதுபோன்ற நபர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டாம். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என கூறியுள்ளனர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவத்தினர்.