பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

கொரோனாவின் இரண்டு அலைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து, இந்த மூன்றாவது அலை சற்றே வித்தியாசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்க அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்தமுறை இளம் நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொடரின் பிடியில் சிக்குவது அதிகரித்துள்ளது.
விஷ்ணு விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அந்தவகையில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவரது தந்தை மம்முட்டியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இப்போது துல்கருக்கும் கொரோனா பாதிப்பு என்கிற செய்தி இரண்டு தரப்பு ரசிகர்களையும் மொத்தமாக கவலைப்பட வைத்துள்ளார்..
இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “கோவிட் பாசிடிவ் என இப்போதுதான் ரிசல்ட் வந்துள்ளது.. என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.. சிறிய ஜுரம் தானே தவிர பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. கடந்த சில நாட்களாக என்னுடன் படப்பிடிப்பில் நெருங்கி பணியாற்றியவர்களில் உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இந்த சர்வதேச பரவல் இன்னும் ஓயவில்லை.. தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்” என கூறியுள்ளார்...