தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

உலகமே கொரானோ மூன்றாவது அலையால் திண்டாடிக் கொண்டிருக்க நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளர். நேற்று “நாள் 4, மேஜிக் நிகழ்ந்த போது,” என ஒரு பனி மலையில் பனிச்சறுக்கு உடையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின் அவர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் யாரைக் குறிக்கிறது என்பது கேள்வியாக எழுகிறது. அதில், “உங்களது ஈகோவை விடுங்கள் என வீட்டில் சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை, புதிய ஆரம்பம், ஸ்கையிங்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு பற்றி மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. நாகசைதன்யா, அவரது அப்பா நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் இருவருமே 'பிரிவு' பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர். அவற்றையும் மனதில் வைத்து சமந்தா 'ஈகோ' பற்றிய பதிவைப் பதிவிட்டிருக்கலாமோ ?.