தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் கூறுகையில், அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை வெகுவாகக் கவரக்கூடிய இந்த படம் திரைக்கு வரும்போது சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.