இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் பிப்ரவரி 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே படம் திருப்திகரமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே ராதே ஷ்யாம் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் அவ்வளவு தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வராது. ஆகவே படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்கிறார்கள்.