இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் அதிக ரசிகர் பலம் கொண்டவர் என்பதிலும் அவரது படங்கள் அதிகம் வசூலிப்பவை என்பதிலும் சந்தேகமே இல்லை.. ஆனால் 18 வருடங்களாக இந்த திரையுலகில் வெற்றி பவனி வந்தாலும் கூட, சமீப வருடங்களில் திடீரென புகழ்பெற்று வளர்ந்துவிட்ட விஜய் தேவரகொண்டாவின் சமூகவலைதள பாலோயோயர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சற்று கீழேதான் அல்லு அர்ஜூன் இருந்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை 12 மில்லியன் பாலோயர்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் 'புஷ்பா ; தி ரைஸ்' படம் வெளியானபின் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் பலம் இன்னும் அதிகரித்து அவையெல்லாம் இன்ஸ்டாகிராம் பாலோயர்களாக மாறியுள்ளன.
ஆம்.. தற்போது 14.5 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் விஜய் தேவரகொண்டாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு 16 மில்லியன் பாலோயர்களுடன் முதல் இடத்தில் ஜம்மென்று அமர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன். குறிப்பாக கடந்த பத்து நாட்களுக்குள் மட்டுமே புதிதாக பத்து லட்சம் பாலோயர்கள் அல்லு அர்ஜுனை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்றால் எல்லாம் புஷ்பா மயம் தான்.