பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் அதிக ரசிகர் பலம் கொண்டவர் என்பதிலும் அவரது படங்கள் அதிகம் வசூலிப்பவை என்பதிலும் சந்தேகமே இல்லை.. ஆனால் 18 வருடங்களாக இந்த திரையுலகில் வெற்றி பவனி வந்தாலும் கூட, சமீப வருடங்களில் திடீரென புகழ்பெற்று வளர்ந்துவிட்ட விஜய் தேவரகொண்டாவின் சமூகவலைதள பாலோயோயர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சற்று கீழேதான் அல்லு அர்ஜூன் இருந்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை 12 மில்லியன் பாலோயர்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் 'புஷ்பா ; தி ரைஸ்' படம் வெளியானபின் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் பலம் இன்னும் அதிகரித்து அவையெல்லாம் இன்ஸ்டாகிராம் பாலோயர்களாக மாறியுள்ளன.
ஆம்.. தற்போது 14.5 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் விஜய் தேவரகொண்டாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு 16 மில்லியன் பாலோயர்களுடன் முதல் இடத்தில் ஜம்மென்று அமர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன். குறிப்பாக கடந்த பத்து நாட்களுக்குள் மட்டுமே புதிதாக பத்து லட்சம் பாலோயர்கள் அல்லு அர்ஜுனை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்றால் எல்லாம் புஷ்பா மயம் தான்.