பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை சவுகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த பத்மஸ்ரீ விருதை சவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிதான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக ஒன்றிய அரசு என்கிற பெயரில் அழைத்து வருகிறது. இப்படி அழைப்பது ஏற்கனவே பல தரப்பினரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு கலைஞர், அதிலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்பவர் மத்திய அரசு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று கூறுவது ஒரு சார்புத்தன்மை உடையதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.