தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்கு தந்தையாக அல்லது அவர்களுக்கு வில்லனாக என ஒரு காலத்தில் தவறாமல் இடம்பெற்று வந்தவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் இப்போதும் அது தொடர்ந்தாலும் கூட, தமிழில் விஜய், அஜித் என இரண்டு பேருடனும் அவர் இணைந்து நடித்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
விஜய்யுடன் கடைசியாக வில்லு படத்திலும் அஜித்துடன் பரமசிவன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது விஜய்யுடன் 11 வருடங்களுக்கு பிறகும் அஜித்துடன் 16 வருடங்களுக்கு பிறகும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கவுள்ளார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இதற்கு முன் இயக்கிய தோழா (ஊபிரி) படத்திலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி சேரும் படத்திலும் அஜித் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ரசிகர்கள் எப்போதுமே இந்த 'கில்லி; கூட்டணியை மீண்டும் 'ஆசை'யுடன் ரசிக்க காத்திருக்கிறார்கள் என தாரளமாக சொல்லலாம்.