2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர். பிங்க் படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். அதன்பிறகு ரன்னிங் ஷாதி, தி காசி அட்டாக், நாம் ஷபானா உள்பட பல படங்களில் நடித்த அவர் தப்பட், ராஷ்மி ராக்கெட், ஹசன் தில்ருபா படங்கள் மூலம் சோலோ ஹீரோயின் ஆனார். இப்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான சபாஷ் மிது, உள்பட 4 பாலிவுட் படங்களிலும் தலா ஒரு தெலுங்கு, தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தேன். இப்போது தேர்வு செய்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன். எனது படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இனி நான் சினிமாவைத் தேடி ஓடுவதில்லை. ஒருவேளை படங்கள் இல்லை என்றால் நல்ல தயாரிப்பாளர்களை தேடி நான் ஓடுவேன். எனக்காக இந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். நான் சுதந்திரமாக இருப்பதால் எனக்கான வேலையை நானே செய்து கொள்வேன். என்று கூறியிருக்கிறார்.