ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா - நாக சைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.