தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பு ‛ஆர்ஆர்ஆர்'. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் ஆங்கில நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, கொமரபீம், அல்லூரி சீதா ராமராஜூ ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனை கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார்.
கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த இந்த படம் ஜன., 7ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சமீபத்தில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டால் மார்ச் 18 அல்லது ஏப்., 28ல் இந்த படத்தை வெளியிட தயார் என படக்குழு அறிவித்தனர்.
இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அடுத்த மாதத்திற்குள் தியேட்டர்கள் முழுமையாக 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என ஆர்ஆர்ஆர் படக்குழு நம்புகின்றனர். இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தை மார்ச் 25ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.