பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பு ‛ஆர்ஆர்ஆர்'. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் ஆங்கில நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, கொமரபீம், அல்லூரி சீதா ராமராஜூ ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனை கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார்.
கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த இந்த படம் ஜன., 7ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சமீபத்தில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டால் மார்ச் 18 அல்லது ஏப்., 28ல் இந்த படத்தை வெளியிட தயார் என படக்குழு அறிவித்தனர்.
இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அடுத்த மாதத்திற்குள் தியேட்டர்கள் முழுமையாக 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என ஆர்ஆர்ஆர் படக்குழு நம்புகின்றனர். இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தை மார்ச் 25ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.