'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் சோசியல் மீடியாவில் இதுவரை கணக்கு தொடங்கவில்லை. என்றாலும் அஜித் பெயரில் ஏராளமான போலி வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இது போன்ற கணக்குகளை அஜித்தின் ரசிகர்கள் தொடர வேண்டாம் என்று ஏற்கனவே அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித் மனைவி ஷாலினி பெயரிலும் போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா கூறுகையில், ஷாலினி அஜித்குமார் பெயரில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருப்பவர், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கணக்கு போலியானது. அதனால் அந்தக் கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .