லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகா சின்னத்திரையின் பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட், ரியாலிட்டி ஷோக்கள் என பிசியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் யாஷிகாவிடம் 'நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?' என அவர் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக 'இல்லை நான் யாஷிகா' என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக செலிபிரேட்டியாக வலம் வரும் பெண்களை, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தேவையில்லாத கேள்விகளை நாகரீகமற்ற சில நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அவர்களை போன்றவர்களை யாஷிகா மிகவும் சாதரணமாக கடந்து சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல பெண்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும், இவர்களின் கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு பதிலளித்து பெண்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.