நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகா சின்னத்திரையின் பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட், ரியாலிட்டி ஷோக்கள் என பிசியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் யாஷிகாவிடம் 'நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?' என அவர் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக 'இல்லை நான் யாஷிகா' என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக செலிபிரேட்டியாக வலம் வரும் பெண்களை, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தேவையில்லாத கேள்விகளை நாகரீகமற்ற சில நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அவர்களை போன்றவர்களை யாஷிகா மிகவும் சாதரணமாக கடந்து சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல பெண்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும், இவர்களின் கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு பதிலளித்து பெண்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.