சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர்.
இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் போலீஸ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் என்னுடைய குஜராத்தி படமான ஜி படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன். அதில் நான் கதாநாயகனாக நடித்திருந்தேன். ஆனால், அகிலன் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் வழக்கமான போலீஸ் கேரக்டர் அல்லாமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்,' என்றார்.