இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர்.
இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் போலீஸ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் என்னுடைய குஜராத்தி படமான ஜி படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன். அதில் நான் கதாநாயகனாக நடித்திருந்தேன். ஆனால், அகிலன் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் வழக்கமான போலீஸ் கேரக்டர் அல்லாமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்,' என்றார்.