தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம்.
இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து, “அவள் உங்களிடம் வந்து பூக்களைக் கொடுக்கும் போது, முதல் முறை போலவே தோன்றும்…இது நிஜமாகவே மகிழ்ச்சியான காதலர் தினம் தான்” என்று பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதன் உடன் காத்துவாக்குல ஒரு காதல் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்து தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.