திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று(பிப்., 19) காலை 7 மணிக்கு துவங்கியது. நடிகர் விஜய் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து ஓட்டளித்தார். விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஓட்டுப்போட்டுவிட்டு வந்த விஜய், தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரலானது.
கடந்தமுறை சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் இன்று, சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து சென்றார்.
![]() |