'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து நடிகை காவ்யா தாபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் விசாரணை நடத்திய பெண் போலீசின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் காவ்யா தாபரை கைது செய்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.