பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

90களில் பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கவுசிக் தீவிரமான விஜய் ரசிகர். சமீபத்தில் ரோஜா, ஆர்கே செல்வமணி, கவுசிக் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் விஜய் மீதான ஈர்ப்பு எத்தகையது என கேட்டதற்கு அவர் கூறிய பதில் விஜய் ரசிகர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது.
ஆம்.. விஜய்யின் ஒவ்வொரு பட டிரைலரையும் கிட்டத்தட்ட பல்லாயிரம் முறை பார்த்து விடுவாராம் கவுசிக். இவற்றை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட நூறு ஜிமெயில் கணக்குகளை துவங்கி வைத்திருக்கிறாராம். அத்தனை கணக்குகள் மூலமாகவும் அந்த டிரைலரை பார்த்து லைக் செய்வது, கமெண்ட் போடுவது என தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறாராம் கவுசிக். தங்கள் மகன் விஜய் ரசிகர் என்பதில் பெற்றோருக்கும் மிகவும் பெருமையே என்பதையும் அந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.